-பா. இந்திரா பிரியதர்ஷிணி-
கண்கள்
கண்கள் உப்பியிருந்தால்...
என்ன வியாதி : சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும்.
டிப்ஸ் : உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மேலும் அதிகப்படியான நீர் அருந்துவது சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய உதவும்.
கண் இமைகளில் வலி
என்ன வியாதி : அதிகப்படியான வேலை காரணமாக இந்த வலி வரலாம். மேலும் மக்னீசியம் உடலில் குறைவதால் உடல் சோர்வடைந்து கண் இமைகளில் வலி உண்டாகிறது.
டிப்ஸ்: போதுமான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும். அதோடு உணவில் முட்டைக்கோஸ் மற்றும் கீரைகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
கண்களில் தெரியும் அதிகப்படியான வெளிச்சம்
என்ன வியாதி : அதிகமாக வேலை செய்து கொண்டே இருப்பது. இந்த ஸ்டிரெஸ்ஸினால் உங்கள் மூளை குழப்பமடைந்து கண்களுக்கு தவறான தகவல்களை அனுப்பிவிடுகிறது. அந்த நேரத்தில் நமக்கு சட்டென அதிகப்படியான வெளிச்சங்களும், புள்ளிகளும் பார்வைக்குத் தெரிகிறது.
டிப்ஸ்: எப்பொழுதும் நிமிர்ந்து நிற்க வேண்டும். அதிகமாக காபி குடிக்கும் பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும்.
கண்கள் உலர்ந்து போவது.
என்ன வியாதி: நாம் ஏ.சி. நிறைந்த இடங்களில் அதிக நேரத்தைச் செலவிடும் போதும், கண்கள் அதிக வேலையினால் களைப்படையும் போதும் நம் கண்கள் உலர்ந்து மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறது.
டிப்ஸ்: குறைந்தது எட்டு மணி நேர இரவுத் தூக்கம் மிகவும் அவசியம். தினமும் கண்களை மேலும்_கீழுமாகவும், பக்கவாட்டின் இருபுறமும் அசைத்தல் போன்ற எளிய உடற்பயிற்சிகளை ஒரு நாளில் இரண்டு முறை செய்யவேண்டும்.
சருமம்
தோலில் தடிப்புகள் ஏற்படுதல்
என்ன வியாதி : இருதய நோய் இருக்கலாம். குறிப்பாக இது காதுகளுக்குப் பக்கத்திலிருக்கும் தோலில் ஏற்படுமானால் உங்களுக்கு இருதய கோளாறு உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். ஆனால், இப்படி அந்த இடத்தில் ஏன் தோல் தடிக்கிறது என்று டாக்டர்களுக்கே இன்னும் சரிவர புரியவில்லை என்கிறார்கள்.
டிப்ஸ்: அதிகப்படியான மன அழுத்தம் ‘ஹார்ட்_அட்டாக்’ வருவதற்கான வாய்ப்பை உருவாக்கும். மனதை பாரமில்லாமல் லேசாக வைத்துக் கொள்ள முயற்சிப்பதும், பிரச்சினைகளை நல்ல முறையில் அணுகுவதும் இதைத் தவிர்க்கும்.
முகம் வீக்கமாக இருப்பது
என்ன வியாதி: உடலில் தண்ணீர் இழப்பு அதிகமாக இருப்பது. இப்படி ஏற்படும்போது உடலுக்குத் தண்ணீர் அதிகம் தேவைப் படுகிறது. உடலுக்குப் போதுமான தண்ணீர் கிடைக்காமல் போனால், ரத்த செல்கள் விரிவடைந்து முகம் வீக்கமாகத் தெரியும்.
டிப்ஸ்: ஒரு நாளைக்கு எட்டு கிளாஸ் தண்ணீராவது அருந்துவது அவசியம். எப்போதும் தண்ணீர் பாட்டிலை உடன் வைத்துக் கொண்டால் தண்ணீர் அருந்த வேண்டும் என்கிற உணர்வு ஏற்பட்டு அருந்துவீர்கள்.
தோல் இளம் மஞ்சளாக மாறுவது
என்ன வியாதி: கல்லீரல் நோய். கல்லீரல் பாதிப்படையும்போது உடலிலிருக்கும் பித்த நீர் போன்ற மஞ்சள் நிற திரவங்களை வெளியேற்ற முடிவதில்லை. இதனால் தோல் மஞ்சள் நிறத்திற்கு மாறுகிறது.
டிப்ஸ்: அதிகப்படியான ஆல்கஹாலின் அளவால் இப்படி கல்லீரல் பிரச்சினை ஏற்படுகிறது. குடிப்பழக்கம் இருந்தால், உடனடியாக நிறுத்தி விடுவதே நல்லது.
பாதம்
கை கால்களில் சில நேரங்களில் சுறுசுறுவென உள்ளே ஏதோ ஓடுவது போலிருத்தல்
என்ன வியாதி: சீரான ரத்த ஓட்டமின்மை. ரத்தக் குழாயில் அடைப்பு இருந்தால் உடலின் ரத்த ஓட்டம் சீராக இருக்காது. இந்த அறிகுறி உங்கள் ரத்தமானது பாதம் வரை சீராக ஓடச் செய்யும் முயற்சியே ஆகும்.
டிப்ஸ்: வைட்டமின் ணி நிறைந்த உணவுகளும் கீரைகளும் சாப்பிட வேண்டும்.
பாதம் மட்டும் மரத்துப் போதல்
என்ன வியாதி: நீரிழிவு நோயின் பாதிப்பு. டயபடீஸ், ரத்தத்திலிருக்கும் செல்களைப் பாதிப்பதோடு, நரம்புகள் செய்யும் வேலைகளையும் தடுத்து விடுகிறது. இதன் விளைவாக சில நேரங்களில் கால்களில் செருப்புக்கள் உராய்ந்து ஏற்படுத்தும் எரிச்சலையோ வலியையோகூட உணர்ந்து கொள்ள முடியாது.
டிப்ஸ்: பிளாக் டீ அல்லது கிரீன் டீ உங்கள் இரத்தத்திலிருக்கும் குளுக்கோஸின் அளவைக் குறைத்து நீரிழிவு நோயைக் கொஞ்சம் கட்டுப்படுத்தும். உடல் பருமனும்கூட டயபடீஸ் வருவதற்கு ஒரு முக்கிய காரணமாகும். அதனால் உடல் எடை அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
பாதங்களில் உலர்ந்த வெடிப்புகள்
என்ன வியாதி : தைராய்டு பிரச்சினையாக இருக்கலாம். இந்த தைராய்டு சுரப்பிதான் நம் தோலுக்குத் தேவையான ஹார்மோன்களை ஒழுங்கு செய்கிறது. இந்த தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாதபோது, நம் பாதங்களின் தோல் உலர்ந்துபோகும். பாதங்களை சரிவரபாராமரிக்காமல் இருந்தால் அதிக அளவில் பாதிப்படைந்துவிடும்.
டிப்ஸ்: தைராய்டு பிரச்சினையின் வேறு சில அறிகுறிகள், அதிக சோர்வும் உடல்எடை அதிகமாதலும் இதில் எந்த அறிகுறிகள் இருந்தாலும் மருத்துவரைச் சந்திப்பது அவசியம்.
கைகள்
சிவந்த உள்ளங்கை
என்ன வியாதி: கல்லீரல் பிரச்சினையாக இருக்கலாம். நோய்வாய்ப்பட்ட கல்லீரலால், நம் இரத்தத்திலுள்ள ஹார்மோன்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும். அதனால் உங்கள் ரத்தத்தின் நிறம் அதிக சிகப்பாகிவிடும். கல்லீரல் சரியாக வேலை செய்யவில்லை என்பதை, அதிக சிவப்பான உள்ளங்கைகள் தான் சட்டென காட்டிக் கொடுக்கும். காரணம் உடலின் மற்ற பாகங்களைவிட உள்ளங்கையின் தோல் மிகவும் மிருதுவாக இருப்பதுதான்.
டிப்ஸ்: கீழாநெல்லியை வாரத்தில் ஒருதரம் சாப்பிடுவது கல்லீரலைச் சரிப்படுத்தும். உடம்பின் விஷத்தன்மையை மாதம் ஒரு முறையாவது போக்க, ஒரு நாள் பழம் மட்டும் சாப்பிடுங்கள்.
வெளுத்த நகங்கள்
என்ன வியாதி: இரத்த சோகை இருக்கிறது. இரத்தத்திலுள்ள சிகப்பணுக்கள் அளவில் குறையும்போது சின்னச் சின்ன வேலையைச் செய்வதற்கும் உடல் பலமின்றிப் போகும்!
ரத்தத்தின் சிவப்பணுக்கள் குறைவதால், இயல்பாக நகம் இருக்க வேண்டிய பிங்க் நிறம் போய், வெளுத்து விடுகின்றன.
டிப்ஸ்: இரும்புச்சத்து இரத்தத்திலுள்ள சிகப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும். ஈரல், கீரைவகைகள், மற்றும் இறைச்சியை உணவுடன் சேர்த்துக் கொள்ளவேண்டும். அல்லது டாக்டரின் ஆலோசனையின்படி குறிப்பிட்ட நாட்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகளோடு பி_12 மாத்திரைகளையும் எடுத்துக் கொள்வது நல்லது.
விரல் முட்டிகளில் வலி
என்ன வியாதி: ஆர்த்தரடீஸ் என்னும் மூட்டுவலி இருக்கிறது. இதனால் விரல் முட்டிகளில் வீக்கமும் வலியும் ஏற்படும். இந்த வலி அதிகமாக விரல் முட்டிகளில்தான் காணப்படும். அவை வடிவத்தில் சிறியதாக இருப்பதால், இந்த வலி உடனே வர வாய்ப்புண்டு. வயதானவர்களுக்கு மட்டுமே இந்த மூட்டுவலி வருவதில்லை. எந்த வயதுக்காரர்களுக்கும் வரலாம்.
டிப்ஸ்: உடலுக்குத் தேவையான கால்சியம் மற்றும் வைட்டமின் ஙி சரியான அளவில் எடுத்துக் கொண்டால் மூட்டு வலி வருவதைக் குறைக்கலாம். ஒழுங்கான உடற்பயிற்சிகள் மற்றும் உடல்பருமனைக் குறைத்தல் இரண்டும் மூட்டு வலி வராமல் தடுக்கும்.
நகங்களில் குழி விழுதல்
என்ன வியாதி: சோரியாஸிஸ் இருக்கிறது. இது ஒரு மோசமான தோல் வியாதி. இதன் மூலம் தோலும் நகங்களும் மிகவும் மென்மையாகி விடும். இந்த வியாதி வந்தால் மென்மையான நகங்களில் குழிகள் வரக்கூடும்.
டிப்ஸ்: உடனடியாக சரும வியாதி நிபுணரைக் கலந்தாலோசிக்கவும். ஸ்டிரெஸ்ஸைக் குறைத்துக் கொண்டாலே வியாதி அதிகமாவதைத் தடுக்கலாம்.
வாய்
ஈறுகளில் இரத்தம் வடிதல்.
என்ன வியாதி: பல் ஈறு சம்பந்தப்பட்ட நோய் இருக்கிறது. ஈறுகளிலும் அவற்றின் அடியிலிருக்கும் எலும்புகளிலும் தொற்று நோய்க் கிருமிகளின் தாக்குதல் இருந்தால், பற்கள் உறுதி இழந்து விழுந்துவிடும். பல் துலக்கும்போது ஈறுகளில் ரத்தம் வருவது இந்த நோயின் முதல் அறிகுறி.
டிப்ஸ்: தினமும் பற்களைச் சுத்தமாக துலக்குவதும், பற்காரைகள் வராமல் பாதுகாப்பதும் அவசியம். ஆன்ட்டி பாக்டீரியல் கொண்ட மவுத் வாஷ் கொண்டு வாய் கொப்பளிப்பது நல்லது.
சாப்பிடும்போது வாய் முழுக்க வலி ஏற்படுதல்
என்ன வியாதி: வாய்ப்புண் இருக்கிறது. அதிகமாக ஸ்டிரெஸ் செய்து கொள்வதாலும் வாய்ப்புண் வரலாம். உடலில் ஃபோலிக் ஆசிடின் குறைவு மற்றும், இரும்புச்சத்து அல்லது வைட்டமின் பி_12ன் குறைவினாலும் இப்படி ஏற்படுகிறது.
டிப்ஸ்: ‘மல்டி_விட்டமின்’ மாத்திரைகளைத் தினமும் எடுத்துக் கொள்ளவேண்டும். மேலும் தியானம் மற்றும் யோகா செய்வதால் ஸ்டிரெஸ்ஸைக் குறைக்கலாம். ஹைட்ரஜன் பெராக்ஸைடு கொண்டு வாய் கொப்பளித்து வருவதால் இன்பெக்ஷன் குறைந்து வாய்ப்புண் ஆறும்.
வாய் ஈரப்பசையின்றி உலர்ந்து போவது.
என்ன வியாதி: உடலின் போதுமான நீர்ச்சத்து குறைந்து போயிருக்கிறது. உடலில் அதிகப்படியான நீர் வெளியேறுவதால் இந்த டீஹைடிரேஷன் ஏற்படுகிறது. மேலும் அதிகப்படியாக வியர்ப்பது மற்றும் நீரிழிவு நோயும்கூட வாய் உலர்ந்து போவதற்கு காரணமாகும்.
டிப்ஸ்: நிறைய திரவ ஆகாரம் எடுத்துக் கொள்ளவேண்டும். தினமும் குறைந்தது ஒன்றரைலிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம். அதன்கூடவே பழங்களையோ பழச்சாறோ அருந்துதலும் நல்லபலன் தரும்.
பா. இந்திரா பிரியதர்ஷிணி
quelle- Kumutham sinegithi
Posts mit dem Label கண்கள் werden angezeigt. Alle Posts anzeigen
Posts mit dem Label கண்கள் werden angezeigt. Alle Posts anzeigen
01 April 2006
24 Februar 2006
விழித்திரை கோளாறுக்கு அதிநவீன சிகிச்சைமுறை
_பாரதிதமிழன்
கார்னியாவில் ஏற்படும் குறைபாடுகளைச் சரி செய்ய கார்னியா மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே தற்போது செய்யப்பட்டு வருகிறது. ஐந்து அடுக்குகள் கொண்ட கார்னியாவில் ஏதாவது ஒரு அடுக்கில் பிரச்னை ஏற்பட்டாலும் மொத்த கார்னியாவையே மாற்றும் முறைதான் இதுவரை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த முறையில் நிறைய சிரமங்கள் உள்ளன. இந்த முழு கார்னியா மாற்று அறுவை சிகிச்சைக்குப் பதிலாக ‘லெமல்லர் கார்னியா கெராடோ பிளாஸ்டி’ என்கிற புதிய நவீன முறை கண்டுபிடிக்கப்பட்டது. டச் நாட்டின் மிகச் சிறந்த மருத்துவர் டாக்டர் ஜெரிட் மெலஸ் இந்த புதிய நவீனமுறை அறுவை சிகிச்சையைக் கண்டு பிடித்தார்.
‘லெமல்லர் கார்னியா கெராடோ பிளாஸ்டி’ அறுவை சிகிச்சை முறையைப் பிரபலப்படுத்திய அமெரிக்க டாக்டர் மார்க்டெர்ரி, மற்றும் சவுதி அரேபியாவைச் சேர்ந்த டாக்டர் முகமது அன்வர் ஆகியோர் சமீபத்தில் சென்னை சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனைக்கு வந்திருந்தனர். அப்போது விழித்திரை மாற்று அறுவை சிகிச்சை குறித்த சர்வதேச கருத்தரங்கில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
‘லெமல்லர் கார்னியா கெராடோ பிளாஸ்டி, நவீன அறுவை சிகிச்சை முறை குறித்து டாக்டர் மார்க்டெர்ரியிடம் கேட்டபோது:
‘‘இந்தப் புதிய கார்னியா அறுவை சிகிச்சையில் இரண்டு வகைகள் உள்ளன. இதில் கார்னியாவின் மேல் அடுக்குகளில் ஏற்படும் பாதிப்புகளுக்கு செய்யும் சிகிச்சைக்கு ‘டீப் ஆன்டீரியர் லெமல்லர் கெராடோபிளாஸ்டி’ என்று பெயர். இந்த முறை பரவலாக இந்தியா உட்பட எல்லா நாடுகளிலும் செய்யப்படுகிறது. இந்த முறை அறுவை சிகிச்சையில், கார்னியாவின் மேல் அடுக்குகளில் காயமோ, புண்ணோ ஏற்பட்டால் மொத்தமாக கார்னியாவை எடுக்காமல் பாதிக்கப்பட்ட பகுதியை மட்டும் நீக்கிவிட்டு, எடுத்த பகுதிக்கு மட்டும் மாற்று கார்னியா பொருத்தப்படும்.
ஆனால், இந்த முறையில் கார்னியாவின் இரண்டு கீழ் அடுக்குகளில் பாதிப்பு ஏற்பட்டால் கார்னியாவை மொத்தமாக எடுத்துவிட்டு மாற்று கார்னியா பொருத்தவேண்டும். இந்தப் பிரச்சனைக்கு தீர்வாக தற்போது கண்டுபிடித்திருக்கும் புதிய ‘டீப் லெமல்லர் எண்டோதீலியல் கெராடோபிளாஸ்டி’ என்ற நவீன கார்னியா மாற்று அறுவை சிகிச்சை உள்ளது. இந்த முறையில், கார்னியாவில் எந்தப் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டாலும் பாதிப்பு ஏற்பட்ட பகுதியை மட்டும் நீக்கிவிட்டு, அந்த இடத்தில் மாற்று கார்னியாவைப் பொருத்தினால் போதுமானது.
இந்த அறுவை சிகிச்சையில் முழுமையாக கண்களைத் திறந்து வழக்கமான அறுவை சிகிச்சை போல செய்யாமல் ஐந்து மில்லி மீட்டர் துளை வழியே அறுவை சிகிச்சை செய்யப்படுவதால், சிகிச்சை முடிந்த சில மணி நேரங்களில் வீட்டிற்குப் போய்விடலாம். ஒரு சில நாட்களில் வழக்கமான எல்லா வேலைகளையும் செய்ய முடியும். ஒவ்வாமை, அதிக நாட்களுக்கு மருந்து சாப்பிட வேண்டியது போன்ற எந்தப் பிரச்சனையும் ஏற்படாது’’ என்றார் டாக்டர் மார்க்டெர்ரி.
‘டீப் லெமல்லர் எண்டோதீலியல் கெராடோ பிளாஸ்டி’ என்ற நவீன அறுவை சிகிச்சையை, இந்தியாவிலேயே முதல் முறையாக சங்கர நேத்ராலயாவில் வெற்றிகரமாகச் செய்து முடித்திருக்கிறார் டாக்டர் ராஜேஷ் போஃக்லா. இவர் அமெரிக்க டாக்டர் மார்க்டெர்ரியிடம் சில மாதங்கள் சிறப்புப் பயிற்சி பெற்றவர்.
இந்தப் புதிய நவீன அறுவை சிகிச்சை குறித்து டாக்டர் ராஜேஷ் போஃக்லாவிடம் கேட்டோம்.
‘‘இந்தியாவில் 46 லட்சம் பேர் கார்னியாவில் கோளாறுகள் ஏற்படுவதால் பார்வையிழந்து தவிக்கின்றனர். ஒவ்வாமை, விபத்து போன்ற காரணங்களினால் கார்னியா பாதிக்கப்படுகிறது. இதைத் தவிர மரபியல் காரணங்களினாலும் கார்னியாவில் பிரச்சனைகள் ஏற்படலாம்.
வழக்கமாக செய்யப்படும் மொத்த கார்னியா மாற்று அறுவை சிகிச்சையில், திசுக்கள் ஒத்துக் கொள்ளாமை, நீண்ட நாட்களுக்கு மருந்து சாப்பிட வேண்டியதினால் ஏற்படும் பக்கவிளைவுகள் போன்ற பிரச்சனைகள் இருந்தன. இந்தப் புதிய நவீன அறுவை சிகிச்சை, இந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைந்துள்ளது’’ என்றார் டாக்டர் ராஜேஷ் போஃக்லா.
பார்வை இழந்தவர்களுக்கு, இந்தப் புதிய நவீன அறுவை சிகிச்சை முறை நம்பிக்கை தரக் கூடியதாக இருக்கிறது.
பாரதிதமிழன்
nantri-kumutham
கார்னியாவில் ஏற்படும் குறைபாடுகளைச் சரி செய்ய கார்னியா மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே தற்போது செய்யப்பட்டு வருகிறது. ஐந்து அடுக்குகள் கொண்ட கார்னியாவில் ஏதாவது ஒரு அடுக்கில் பிரச்னை ஏற்பட்டாலும் மொத்த கார்னியாவையே மாற்றும் முறைதான் இதுவரை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த முறையில் நிறைய சிரமங்கள் உள்ளன. இந்த முழு கார்னியா மாற்று அறுவை சிகிச்சைக்குப் பதிலாக ‘லெமல்லர் கார்னியா கெராடோ பிளாஸ்டி’ என்கிற புதிய நவீன முறை கண்டுபிடிக்கப்பட்டது. டச் நாட்டின் மிகச் சிறந்த மருத்துவர் டாக்டர் ஜெரிட் மெலஸ் இந்த புதிய நவீனமுறை அறுவை சிகிச்சையைக் கண்டு பிடித்தார்.
‘லெமல்லர் கார்னியா கெராடோ பிளாஸ்டி’ அறுவை சிகிச்சை முறையைப் பிரபலப்படுத்திய அமெரிக்க டாக்டர் மார்க்டெர்ரி, மற்றும் சவுதி அரேபியாவைச் சேர்ந்த டாக்டர் முகமது அன்வர் ஆகியோர் சமீபத்தில் சென்னை சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனைக்கு வந்திருந்தனர். அப்போது விழித்திரை மாற்று அறுவை சிகிச்சை குறித்த சர்வதேச கருத்தரங்கில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
‘லெமல்லர் கார்னியா கெராடோ பிளாஸ்டி, நவீன அறுவை சிகிச்சை முறை குறித்து டாக்டர் மார்க்டெர்ரியிடம் கேட்டபோது:
‘‘இந்தப் புதிய கார்னியா அறுவை சிகிச்சையில் இரண்டு வகைகள் உள்ளன. இதில் கார்னியாவின் மேல் அடுக்குகளில் ஏற்படும் பாதிப்புகளுக்கு செய்யும் சிகிச்சைக்கு ‘டீப் ஆன்டீரியர் லெமல்லர் கெராடோபிளாஸ்டி’ என்று பெயர். இந்த முறை பரவலாக இந்தியா உட்பட எல்லா நாடுகளிலும் செய்யப்படுகிறது. இந்த முறை அறுவை சிகிச்சையில், கார்னியாவின் மேல் அடுக்குகளில் காயமோ, புண்ணோ ஏற்பட்டால் மொத்தமாக கார்னியாவை எடுக்காமல் பாதிக்கப்பட்ட பகுதியை மட்டும் நீக்கிவிட்டு, எடுத்த பகுதிக்கு மட்டும் மாற்று கார்னியா பொருத்தப்படும்.
ஆனால், இந்த முறையில் கார்னியாவின் இரண்டு கீழ் அடுக்குகளில் பாதிப்பு ஏற்பட்டால் கார்னியாவை மொத்தமாக எடுத்துவிட்டு மாற்று கார்னியா பொருத்தவேண்டும். இந்தப் பிரச்சனைக்கு தீர்வாக தற்போது கண்டுபிடித்திருக்கும் புதிய ‘டீப் லெமல்லர் எண்டோதீலியல் கெராடோபிளாஸ்டி’ என்ற நவீன கார்னியா மாற்று அறுவை சிகிச்சை உள்ளது. இந்த முறையில், கார்னியாவில் எந்தப் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டாலும் பாதிப்பு ஏற்பட்ட பகுதியை மட்டும் நீக்கிவிட்டு, அந்த இடத்தில் மாற்று கார்னியாவைப் பொருத்தினால் போதுமானது.
இந்த அறுவை சிகிச்சையில் முழுமையாக கண்களைத் திறந்து வழக்கமான அறுவை சிகிச்சை போல செய்யாமல் ஐந்து மில்லி மீட்டர் துளை வழியே அறுவை சிகிச்சை செய்யப்படுவதால், சிகிச்சை முடிந்த சில மணி நேரங்களில் வீட்டிற்குப் போய்விடலாம். ஒரு சில நாட்களில் வழக்கமான எல்லா வேலைகளையும் செய்ய முடியும். ஒவ்வாமை, அதிக நாட்களுக்கு மருந்து சாப்பிட வேண்டியது போன்ற எந்தப் பிரச்சனையும் ஏற்படாது’’ என்றார் டாக்டர் மார்க்டெர்ரி.
‘டீப் லெமல்லர் எண்டோதீலியல் கெராடோ பிளாஸ்டி’ என்ற நவீன அறுவை சிகிச்சையை, இந்தியாவிலேயே முதல் முறையாக சங்கர நேத்ராலயாவில் வெற்றிகரமாகச் செய்து முடித்திருக்கிறார் டாக்டர் ராஜேஷ் போஃக்லா. இவர் அமெரிக்க டாக்டர் மார்க்டெர்ரியிடம் சில மாதங்கள் சிறப்புப் பயிற்சி பெற்றவர்.
இந்தப் புதிய நவீன அறுவை சிகிச்சை குறித்து டாக்டர் ராஜேஷ் போஃக்லாவிடம் கேட்டோம்.
‘‘இந்தியாவில் 46 லட்சம் பேர் கார்னியாவில் கோளாறுகள் ஏற்படுவதால் பார்வையிழந்து தவிக்கின்றனர். ஒவ்வாமை, விபத்து போன்ற காரணங்களினால் கார்னியா பாதிக்கப்படுகிறது. இதைத் தவிர மரபியல் காரணங்களினாலும் கார்னியாவில் பிரச்சனைகள் ஏற்படலாம்.
வழக்கமாக செய்யப்படும் மொத்த கார்னியா மாற்று அறுவை சிகிச்சையில், திசுக்கள் ஒத்துக் கொள்ளாமை, நீண்ட நாட்களுக்கு மருந்து சாப்பிட வேண்டியதினால் ஏற்படும் பக்கவிளைவுகள் போன்ற பிரச்சனைகள் இருந்தன. இந்தப் புதிய நவீன அறுவை சிகிச்சை, இந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைந்துள்ளது’’ என்றார் டாக்டர் ராஜேஷ் போஃக்லா.
பார்வை இழந்தவர்களுக்கு, இந்தப் புதிய நவீன அறுவை சிகிச்சை முறை நம்பிக்கை தரக் கூடியதாக இருக்கிறது.
பாரதிதமிழன்
nantri-kumutham
Labels:
கண்கள்,
கார்னியா,
பார்வை,
விழித்திரை கோளாறு
Abonnieren
Posts (Atom)